உள்ளூர் செய்திகள்

மின்சாரம் தாக்கி 3 வயது குழந்தை பலி

Published On 2023-05-23 15:31 IST   |   Update On 2023-05-23 15:31:00 IST
  • மின்வயரை தொட்டதில் மின்சாரம் தாக்கி பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.
  • சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி, மே.23-

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை அடுத்த பெத்தசிகரப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் மாரப்பா. இவரது மனைவி பத்மா (வயது30). இவர்களுக்கு திலாக(3) என்ற பெண்குழந்தை உள்ளது. சம்பவத்தன்று குழந்தை திலகா வீட்டில் விளையாடி கொண்டிருந்தது. அப்போது அங்கு இருந்த மின்வயரை தொட்டதில் மின்சாரம் தாக்கி பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. குழந்தையின் உடலை பார்த்து தாய் கதறி அழுதார்.

இந்த சம்பவம் குறித்து பத்மா பேரிகை போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவித்தார். உடனே அங்கு விரைந்து வந்த போலீசார் குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரி சோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News