உள்ளூர் செய்திகள்

மணல் கடத்த பயன்படுத்திய 3 லாரிகள் பறிமுதல்

Published On 2023-04-29 09:51 GMT   |   Update On 2023-04-29 09:51 GMT
  • அதிகாரிகள் பர்கூர் அருகே வி.நாகமங்கலம் புருஷோத்தமன் ஏரி பகுதியில ரோந்து சென்றனர்.
  • தலா 2 யூனிட் மணல் வீதம் மொத்தம் 6 யூனிட் கடத்த இருந்தது தெரிய வந்தது.

பர்கூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் தாலுகா கொண்டப்ப நாயனப்பள்ளி கிராம நிர்வாக அலுவலர் சவுந்தரராஜூ மற்றும் அதிகாரிகள் பர்கூர் அருகே வி.நாகமங்கலம் புருஷோத்தமன் ஏரி பகுதியில ரோந்து சென்றனர். அப்போது அங்கு 3 லாரிகள் நின்றன. அதை சோதனை செய்த போது அதில் தலா 2 யூனிட் மணல் வீதம் மொத்தம் 6 யூனிட் கடத்த இருந்தது தெரிய வந்தது.

இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் சவுந்தரராஜூ கொடுத்த புகாரின் பேரில் பர்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து 3 லாரிகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News