உள்ளூர் செய்திகள்

விபசாரத்தில் ஈடுபட்ட புேராக்கர்கள் 3 பேர் கைது

Published On 2023-01-30 09:09 GMT   |   Update On 2023-01-30 09:09 GMT
  • விவசாயி ஒருவர் கோத்தகிரி ரோட்டில் நடந்து சென்றார்.
  • போலீசார் அந்த 2 பெண்களையும் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்

ஊட்டி,

ஊட்டி பர்ன் ஹில் பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவர் கோத்தகிரி ரோட்டில் நடந்து சென்றார்.அங்போது அங்கு நின்றிருந்த வாலிபர் தங்களிடம் அழகிகள் உள்ளனர். விருப்பம் இருந்தால் பணம் கொடுத்து உல்லாசம் அனுபவிக்கலாம் என்றார். இதனை கேட்டு அந்த விவசாயி அவருடன் ஒரு ஓட்டலுக்கு சென்றார். அங்கு சென்றதும் பணம் எடுத்து வருவதாக அங்கிருந்தவர்களிடம் கூறி வெளியே சென்றார். பின்னர் இதுகுறித்து அவர் ஊட்டி மத்திய போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் உடனே சம்பவ இடத்துக்கு சென்று அந்த ஓட்டலில் சோதனை செய்தனர். அதில் 2 பெண்களை வைத்து விபசாரத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அந்த 2 பெண்களையும் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். விபசாரத்தில் ஈடுபட்ட புேராக்கர்கள் தென்காசியை சேர்ந்த சையது அலி (வயது 43), மேலூரை சேர்ந்த ரகுபதி (36), தூத்துக்குடியை சேர்ந்த அபுதாகீர் (47) ஆகியோரை கைது செய்தனர்.

Tags:    

Similar News