உள்ளூர் செய்திகள் (District)

சங்கராபுரம் அருகே சாராயம் கடத்திய 3 பேர் கைது

Published On 2023-02-20 07:35 GMT   |   Update On 2023-02-20 07:35 GMT
  • அரசம்பட்டு ஆற்று பாலம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டபோது ஒருவர் தப்பி ஓடினார். மீதமுள்ள 3 பேரையும் பிடித்து கைது செய்தனர்
  • போலீசார், அவர்களிடம் இருந்து 240 லிட்டர் சாராயம் மற்றும் 4 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் காவல் ஆய்வாளர் பாண்டியன் தலைமையிலான காவலர்கள் அரசம்பட்டு ஆற்று பாலம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்தஅரசம்பட்டு ஆற்று பாலம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். ஒருவர் மட்டும் இருசக்கர வாகனத்தை அங்கேயே விட்டு விட்டு தப்பி ஓடினார். மீதமுள்ள 3 பேரையும் பிடித்து சோதனை செய்தபோது, லாரி டியூப்களில் சாராயம் கடத்தி வந்தது தெரியவந்தது.

இதையடுத்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் பெரம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 22), தவமணி (19), அஜித் (20) என்பதும், தப்பி ஓடியவர் மல்லாபுரம் முத்துராமன் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 240 லிட்டர் சாராயம் மற்றும் 4 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய முத்துராமனை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News