உள்ளூர் செய்திகள்

நெல்லையில் அனுமதியின்றி மண் கடத்திய 3 பேர் கைது

Published On 2023-06-11 14:29 IST   |   Update On 2023-06-11 14:29:00 IST
  • தாழையூத்து அருகே தெற்கு மலை பகுதியில் சிலர் மண் அள்ளுவதாக தாழையூத்து போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
  • கோலீசாரை கண்டதும் அங்கு மண் அள்ளிக்கொண்டிருந்த 6 பேரும் தப்பியோட முயன்றனர்.

நெல்லை:

நெல்லையை அடுத்த தாழையூத்து அருகே தெற்கு மலை பகுதியில் சிலர் மண் அள்ளுவதாக தாழையூத்து போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனடி யாக சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.

3 பேர் பிடிபட்டனர்

அவர்களை கண்டதும் அங்கு மண் அள்ளிக் கொண்டிருந்த 6 பேரும் தப்பியோட முயன்றனர். அவர்களை போலீசார் சுற்றி வளைத்த நிலையில் 3 பேர் பிடிபட்டனர்.

விசாரணையில் அவர்கள் தச்சநல்லூர் கரையிருப்பு வடக்கு தெருவை சேர்ந்த காளிராஜன்(வயது 34), கலியாவூர் வடக்கு தெருவை சேர்ந்த வெள்ளப்பாண்டி (24), சீவலப்பேரி பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த சுரேஷ்(22) ஆகியோர் என்பது தெரியவந்தது.

இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்து, மண் கடத்தலுக்கு பயன் படுத்திய 2 டிப்பர் லாரிகள், 1 ஜே.சி.பி. எந்திரத்தை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பியோடிய வேலு, பெருமாள், கனி ஆகியோரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News