கடலூர் அருகேகல்லூரி மாணவனை தாக்கிய 3 பேர் கைது
- சம்பவத்தன்று கல்லூரி முடித்து அரசு பஸ்ஸில் தனது ஊருக்கு சென்று கொண்டிருந்த போது பஸ்ஸில் கூட்டமாக இருந்ததால் படிக்கட்டில் நின்று கொண்டு சென்றார்.
- திடீரென்று அங்கு வந்த 3 வாலிபர்கள் விஷ்ணுவை சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
கடலூர்:
கடலூர் அடுத்த குறிஞ்சிப்பாடி ஆடூர் அகரம் சேர்ந்தவர் விஷ்ணு (வயது 20). கடலூர் அரசு பெரியார் கலை கல்லூரியில் பி.எஸ்.சி. 2-ம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று கல்லூரி முடித்து அரசு பஸ்ஸில் தனது ஊருக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது பஸ்ஸில் கூட்டமாக இருந்ததால் படிக்கட்டில் நின்று கொண்டு விஷ்ணு சென்றார். அப்போது 3 வாலிபர்கள் பஸ்க்குள் விஷ்ணு செல்ல வேண்டும் என கூறி திட்டியதாக தெரிகிறது.
இதன் காரணமாக விஷ்ணு பஸ்ஸிலிருந்து இறங்கி வேறு பஸ்ஸில் செல்வதற்கு குறிஞ்சிப்பாடி - புவனகிரி சாலை காமராஜர் சிலை அருகே நடந்து சென்றார். அப்போது திடீரென்று அங்கு வந்த 3 வாலிபர்கள் விஷ்ணுவை சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.இதில் காயமடைந்த விஷ்ணு குறிஞ்சிப்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். இது குறித்த புகாரின் பேரில் குறிஞ்சிப்பாடி போலீசார், பொட்டவெளி சேர்ந்த கிஷோர், வாஞ்சிநாதன் மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.