உள்ளூர் செய்திகள்

மதுப்பாட்டில்கள் கடத்தியதாக கைது செய்யப்பட்ட 3 பேரை படத்தில் காணலாம்.

கள்ளக்குறிச்சி அருகே புதுவை மாநில மது கடத்திய 3 பேர் கைது

Published On 2022-10-23 07:05 GMT   |   Update On 2022-10-23 07:05 GMT
  • கள்ளக்குறிச்சி அருகே புதுவை மாநில மது கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
  • காட்டுக் கொட்டாய் பகுதியில் சந்தேகப்படும்படியான 3 பேரை பிடித்து விசாரணை செய்தனர்.

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி மது விலக்கு அமலாக்க பிரிவு போலீசாருக்கு மலைக் கோட்டை பகுதியில் வெளி மாநில மதுபாட்டில் விற்பனை செய்வதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் தலைமையி லான போலீசார் அந்த பகுதிக்கு விரைந்து சென்ற னர். அப்போது காட்டுக் கொட்டாய் பகுதியில் சந்தேகப்படும்படியான 3 பேரை பிடித்து விசாரணை செய்தனர்.காட்டுக் கொட்டாய் பகுதியில் சந்தேகப்படும்படியான 3 பேரை பிடித்து விசாரணை செய்தனர்.

விசாரணையில் சங்கரா புரம் அருகே ராவத்த நல்லூர் கிராமத்தைச் சேர்ந்த நவீன் குமார் (எ) நவீன் (வயது 27), கள்ளக்குறிச்சி கரியப்பாநகர் பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் (35), மற்றும் நாமக்கல் பாப்பான் காடு பகுதியைச் சேர்ந்த சுரேஷ் (33) என்பதும் தெரிய வந்தது. இவர்கள் புதுவையில் இருந்து மது பாட்டில்களை வாங்கி வந்து காட்டுகொட்டகை பகுதியில் மறைத்து வைத்து தீபாவளி பண்டிகையை யொட்டி விற்பனை செய்த தும் தெரிய வந்தது. அவர்களிடமிருந்து 2852 மது பாட்டில்கள் மற்றும் 3 கேன்களில் இருந்த 105 லிட்டர் விஷசாராயம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் 3 பேரையும் கைது செய்தனர்.

Tags:    

Similar News