உள்ளூர் செய்திகள்

2-வது திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை

Published On 2022-10-07 10:03 GMT   |   Update On 2022-10-07 10:03 GMT
  • கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
  • சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

மேட்டூர்:

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள பெரும்பாலையை சேர்ந்தவர் சேட்டு (வயது 55). கூலித்தொழிலாளி. இவரது 2-வது மகள் சந்தியா (23). இவரும், சேலம் மாவட்டம் மேச்சேரி அரங்கனூர் மேட்டுத்தெருவை சேர்ந்த பெருமாள் மகன் இளங்கோவனும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 6 வயதில் ஒரு மகள் உள்ளார்.

இந்த நிலையில் அரங்கனூரை சேர்ந்த லட்சுமணன் மகன் முருகேசன் என்பவருடன் சந்தியாவிற்கு பழக்கம் ஏற்பட்டது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது கணவன் மற்றும் குழந்தையை விட்டு பிரிந்த சந்தியா, முருகேசனுடன் சென்று விட்டார். இதனால் மனமுடைந்த இளங்கோவன், கடந்த ஜூலை மாதம் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். கணவன் இறந்த பிறகு சந்தியா, முருகேசனை திருமணம் செய்து கொண்டு சேலம் கேம்பில் வசித்து வந்தார். நேற்று முன்தினம் சந்தியா, வீட்டில் உள்ள மின் விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.இது குறித்து தகவல் அறிந்த சந்தியாவின் தந்தை சேட்டு, கருமலைக்கூடல் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கணவர் முருகேசன் மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மேட்டூர் டி.எஸ்.பி. விஜயகுமாரும், சந்தியா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றார்.

Tags:    

Similar News