உள்ளூர் செய்திகள்

சேலம் அருகே 2-வது திருமணம் செய்த பெண் தற்கொலை

Published On 2022-08-24 15:29 IST   |   Update On 2022-08-24 15:29:00 IST
  • முதல் கணவர் அல்லிமுத்துவை பிரிந்த அவர் தற்பபோது பழனி என்பவருடன் அந்த பகுதியில் வசித்து வந்தார்.
  • இதற்கிடையே சாமியாத்தா நேற்றிரவு வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சேலம்:

சேலம் கருப்பூரை அடுத்த தேக்கம்பட்டியை சேர்ந்தவர் சாமியாத்தா( வயது 35), இவருக்கு 18 வயதில் ஒரு மகளும், 17 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.

இந்த நிலையில் முதல் கணவர் அல்லிமுத்துவை பிரிந்த அவர் தற்பபோது பழனி என்பவருடன் அந்த பகுதியில் வசித்து வந்தார். இதற்கிடையே சாமியாத்தா நேற்றிரவு வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த உறவினர்கள்கதறி துடித்தனர்.

தகவல் அறிந்த கருப்பூர் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். தொடர்ந்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News