உள்ளூர் செய்திகள்

வேப்பூர் அருகே செல்போன் கடையில் 25 விலையுயர்ந்த போன், 2 லட்சம் பணம் கொள்ளை

Published On 2023-09-11 08:00 GMT   |   Update On 2023-09-11 08:00 GMT
  • போலீசார் சி.சி.டி.வி காட்சி மூலம் விசாரணை
  • கடையின் மேற்கூரை பெயர்ந்து கிடந்தது

கடலூர்: 

கடலூர் மாவட்டம் திட்டக்குடி தாலுகா அறியநாற்றி பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மனைவி அனிதா (வயது 25). இவர் வேப்பூர் அடுத்த கூட்டுரோட்டில் செல்போன் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் கடையில் வேலை முடிந்து இரவு அனிதா கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். இதனையடுத்து நேற்று காலை அனிதா தனது கடைக்கு சென்றார். கடையின் பூட்டை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது கடையின் மேற்கூரை பெயர்ந்து கிடந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அனிதா கடையில் சோதனை செய்தபோது 25 விலையுயர்ந்த செல்போன், 2 லட்சம் ரொக்க பணம் திருடு போய் இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து இன்று காலை அனிதா வேப்பூர் போலீசில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் வேப்பூர் போலீசார் வழக்குபதிவு செய்து திருட்டு நடந்த கடைக்கு சென்று அங்குள்ள சி.சி.டி.வி காட்சிகள் மூலம் செல்போன் கடையில் கைவரிசை காட்டிய மர்ம நபர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.

Tags:    

Similar News