உள்ளூர் செய்திகள்
ஆர்ப்பாட்டம்

கடலூரில் புதிய பஸ் நிலையத்தை கலெக்டர் அலுவலகம் பகுதியில் அமைக்கக்கோரி ஆர்ப்பாட்டம்

Published On 2022-06-04 11:24 GMT   |   Update On 2022-06-04 11:28 GMT
கடலூர் புதிய பஸ் நிலையத்தை புதிய கலெக்டர் அலுவலகம் அருகில் அமைக்கக்கோரி கடலூர் தலைமை தபால் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கடலூர்:

முற்போக்கு சிந்தனையாளர் இயக்கம் மற்றும் மக்கள் அதிகாரம் சார்பில் கடலூர் புதிய பஸ் நிலையத்தை புதிய கலெக்டர் அலுவலகம் அருகில் அமைக்கக்கோரி கடலூர் தலைமை தபால் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாநில தலைவர் சரவணன் தலைமை தாங்கினார்.

தலைவர் சுந்தரமூர்த்தி, செயலாளர் அல்லிமுத்து, முத்துக்குமரன், மக்கள் அதிகாரம் நகர செயலாளர் நந்தா, பொருளாளர் ஆனந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் முற்போக்கு சிந்தனையாளர் இயக்கம் மாநில தலைவர் கு. பாலசுப்பிரமணியன், மக்கள் அதிகாரம் மாநில தலைமை நிர்வாகிகள் பாலு, மாவட்ட செயலாளர் ராசாமணி, துணை செயலாளர் ரவிச்சந்திரன், மாவட்ட செயலாளர் வெங்கடேசன் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்கள். இதில் நிர்வாகிகள் விவேகானந்தன், பலராமன், ராஜேஷ் குமார், பாண்டியன், நடராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷம் எழுப்பினார்கள். முடிவில் இணை செயலாளர் ராஜேஷ் குமார் நன்றி கூறினார்.

Tags:    

Similar News