உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்.

தூத்துக்குடியில் ஆட்டோ மீது லாரி மோதல்-வாலிபர் பலி

Published On 2022-06-04 15:09 IST   |   Update On 2022-06-04 15:09:00 IST
தூத்துக்குடியில் ஆட்டோ மீது லாரி மோதிய விபத்தில் வாலிபர் ஒருவர் பலியானார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி:

தூத்துக்குடியில் இருந்து உப்பு லோடு ஏற்றிக்கொண்டு கிழக்கு கடற்கரை சாலையில் நேற்று இரவு ஒரு லாரி சென்று கொண்டு இருந்தது. இரவு 9.30 மணியளவில் தக்கம்மாள்புரம் விலக்கு பகுதியில் சென்றபோது எதிரே வந்த ஆட்டோ மீது எதிர்பாராதவிதமாக லாரி மோதியது. 

இந்த விபத்தில் ஆட்டோவில் பயணம் செய்த ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி பகுதியை சேர்ந்த பரத்குமார் என்ற வாலிபர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். விபத்து குறித்து தருவைகுளம் இன்ஸ்பெக்டர் ஆனந்த தாண்டவம் விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News