உள்ளூர் செய்திகள்
மொபட் மீது கார் மோதியது
கோவை,
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள ஜக்கார்பாளையத்தை சேர்ந்தவர் சின்னசாமி (வயது 55). கூலித் தொழிலாளி. சம்பவத்தன்று இவர் தனது மொபட்டில் பொள்ளாச்சி- பல்லடம் ரோட்டில் சென்றார். அப்போது அந்த வழியாக வந்த கார் மொபட் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த சின்னசாமி சம்பவஇடத்திலேயே துடி,துடித்து பரிதாபமாக இறந்தார். இது குறித்து நெகமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.