உள்ளூர் செய்திகள்
தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து மூதாட்டி பலி
நீரின் அளவை பார்த்தபோது தவறி விழுந்தார்
கோவை,
கோவை விளாங்குறிச்சி திரு நகரை சேர்ந்தவர் வசந்தாமணி (வயது 78). இவர் தனது மகன் ராஜேந்திரனுடன் வசித்து வந்தார்.சம்பவத்தன்று ராஜேந்திரன் விநாயகாபுரத்துக்கு ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்றார். அப்போது அவரது மகள் போன் செய்து பாட்டி வசந்தாமணி தண்ணீர் தொட்டில் இறந்து கிடப்பதாக கூறினார்.
இதைகேட்டு அதிர்ச்சி அடைந்த அவர் வீடு திரும்பினார். உடனே அவர் தீயணைப்பு துறைக்கும், சரவணம்பட்டி போலீசாருக்கும் தகவல் தெரிவித்தார். போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து வசந்தாமணியின் உடலை மீட்டனர்.பின்னர் போலீசார் வசந்தாமணியின் உடலை கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அதில் வசந்தாமணி அடிக்கடி தண்ணீர் தொட்டில் நீரின் அளவை பார்ப்பது வழக்கம். அதே போன்று சம்பவத்தன்று தொட்டில் நீரின் அளவை பார்த்தபோது தவறி விழுந்து தண்ணீரில் ழுழ்கி இறந்ததும் தெரியவந்தது.இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.