உள்ளூர் செய்திகள்
நெல்லை அருகே பெற்றோர் கண்டித்ததால் இளம்பெண் தற்கொலை
நெல்லை அருகே உள்ள தேவர்குளத்தில் பெற்றோர் கண்டித்ததால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.
நெல்லை:
தேவர்குளம் அருகே உள்ள சுண்டங்குறிச்சி மாதாகோவில் தெருவை சேர்ந்தவர் அமல்ராஜ். கூலி தொழிலாளி. இவரது மகள் சினேகா (வயது 19).
இவர் பிளஸ்-2 வரை படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார். இவர் அடிக்கடி செல்போன் பயன்படுத்தி வந்துள்ளார். இதனை அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர்.
சம்பத்தன்று சினேகா விஷம் குடித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மயங்கி கிடந்தார். உடனடியாக அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனளிக்காமல் இன்று அதிகாலை பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக மானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேவர்குளம் அருகே உள்ள சுண்டங்குறிச்சி மாதாகோவில் தெருவை சேர்ந்தவர் அமல்ராஜ். கூலி தொழிலாளி. இவரது மகள் சினேகா (வயது 19).
இவர் பிளஸ்-2 வரை படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார். இவர் அடிக்கடி செல்போன் பயன்படுத்தி வந்துள்ளார். இதனை அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர்.
சம்பத்தன்று சினேகா விஷம் குடித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மயங்கி கிடந்தார். உடனடியாக அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனளிக்காமல் இன்று அதிகாலை பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக மானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.