உள்ளூர் செய்திகள்
மீனாட்சி அம்மன் கோவில் வசந்த உற்சவம்.

மீனாட்சி அம்மன் கோவில் வைகாசி வசந்த உற்சவம்

Published On 2022-06-02 08:30 GMT   |   Update On 2022-06-02 08:30 GMT
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நாளை முதல் வைகாசி வசந்த உற்சவம் நடைபெறுகிறது.
மதுரை

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வைகாசி வசந்த உற்சவம் நாளை (3-ந்தேதி) முதல் 12-ந்தேதி வரை நடக்கிறது. அதன்படி 1-ம் திருநாள் முதல் 9-ம் திருநாள் வரை பஞ்ச மூர்த்திகளுடன் சுவாமிகள் புறப்பாடு மாலை 6 மணி அளவில் நடக்கும். அப்போது சுவாமிகள் கோவிலில் இருந்து புது மண்டபம் சென்று, அங்கு வீதி உலா- தீபாராதனை நடத்தப்படும். இதனைத் தொடர்ந்து சுவாமிகள், 4 சித்திரை வீதிகளிலும் வலம் வரும் உற்சவம் நடக்கும்.

12-ந்தேதி அன்று சுவாமிகள் காலையில் புது மண்டபத்தில் எழுந்தருளுவர். அங்கு பகல் முழுவதும் தங்கி சுவாமிகள் அருள்பாலிப்பர். அன்றைய தினம் மாலையில் அபிஷேகம், தீபாராதனை முடிந்து சித்திரை வீதி உலா நடக்கும்.

முன்னதாக 16-ந்தேதி முதல் 18-ந் தேதி வரை  திருஞானசம்பந்தர் திருவிழா நடக்கும். 18-ந்தேதி காலையில் ஞானசம்பந்தர் தங்கப்பல்லக்கில் எழுந்த ருளி, 63 நாயன்மார்களு டன் 4 ஆவணி மூல வீதி புறப்பாடு நடக்கும். அன்று இரவு 8 மணி அளவில் திருஞான சம்பந்தர் சுவாமிகள் வெள்ளி கோ ரதத்தில் எழுந்தருளி, நான்கு ஆவணி மூல வீதிகளிலும் திருவீதி உலா நடக்கும்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 3-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை வைகாசி வசந்த உற்சவம் திருவிழா நடப்பதால், அன்றைய நாட்களில் திருக்கோவில் சார்பாக உபய தங்க ரதம், திருக்கல்யாணம் ஆகிய நிகழ்ச்சிகள் நடத்தப்படாது.

மேற்கண்ட தகவலை மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகம் அறிக்கை வாயிலாக தெரிவித்து உள்ளது.

Tags:    

Similar News