உள்ளூர் செய்திகள்
.

சேலம் செவ்வாய்ப்பேட்டையில் எலக்ட்ரானிக் கடையில் திருட்டு

Published On 2022-05-31 09:54 GMT   |   Update On 2022-05-31 09:54 GMT
சேலம் செவ்வாய்ப்பேட்டையில் எலக்ட்ரானிக் கடையில் திருட்டு சம்பவத்தில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
சேலம்:

சேலம் குகை பகுதியில் உள்ள ஒரு எலக்ட்ரிக் கடையில் கடந்த 1-ந் தேதி ஷட்டரை உடைத்து பொருட்களை ஒரு கும்பல் கொள்ளையடித்து சென்றது. 

இதையடுத்து செவ்வாய்ப்பேட்டை போலீசார் அங்கு உள்ள சி.சி.டி.வி கேமரா பதிவுகளை வைத்து கொள்ளையர்களை தேடி வந்தனர். அப்போது இந்த கொள்ளையில் ஈடுபட்டது கிச்சிப்பாளையத்தை சேர்ந்த 2 வாலிபர்கள் என்பது தெரியவந்தது. 

அவர்களை போலீசார் நேற்று இரவு மடக்கி பிடித்தனர் .தொடர்ந்து போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News