உள்ளூர் செய்திகள்
முஸ்லிம் ஜமாத் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம்
நாகூரில் முஸ்லிம் ஜமாத் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் நடந்தது.
நாகப்பட்டினம்:
நாகூரில் முஸ்லிம் ஜமாஅத் புதிய உறுப்பினர் சேர்க்கும் முகாம் 29-ந்தேதி முதல் தொடர்ந்து நடந்து வருகிறது. இதில் 18 வயது நிரம்பியவர்கள், விடுபட்டு போனவர்கள் புதிய உறுப்பினர்களாக சேர்க்கப்படுகின்றனர்.
இந்த நிகழ்ச்சியில் நாகூர் முஸ்லிம் ஜமாஅத் தலைவர் சாஹா மாலிம், துணைத் தலைவர் ரம்ஜான் அலி, செயலாளர் அபுல் காசிம் சாஹிப், பொருளாளர் அப்துல் ஹமீது மரைக்காயர் துணைச் செயலாளர் கலில் ரஹ்மான், மற்றும் ஜமாஅத்தார்கள் கலந்து கொண்டனர்.