உள்ளூர் செய்திகள்
ஆலோசனை கூட்டம்

தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு தலைைம நீதிபதி பாராட்டு

Published On 2022-05-30 09:16 GMT   |   Update On 2022-05-30 09:16 GMT
அனைத்து நீதிமன்றங்களும் சொந்த கட்டிடத்தில் இயங்குவதற்கு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
ஊட்டி:

ஊட்டி தமிழக அரசு விருந்தினர் மாளிகையில் சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி தலைமையில் மாவட்ட அளவிலான கூட்டம் நடந்தது. நீதிபதிகள் சதீஷ்குமார், பவானி சுப்பராயன், மாவட்ட நீதிபதி முருகன், மாவட்ட கலெக்டர் அம்ரித் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் சென்னை ஐகோர்ட்டு தலைமை முனீஸ்வர்நாத் பண்டாரி பேசியதாவது:-

நீதித்துறைக்கு தமிழக அரசு அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்து முழு ஒத்துழைப்பும் வழங்கி வருகிறது. இதற்காக எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நீதித்துறையின் அனைத்து உள்கட்டமைப்பு பணிகளுக்கு அனைத்து துறையினரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மேலும் அனைத்து நீதிமன்றங்களும் சொந்த கட்டிடத்தில் இயங்குவதற்கு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். 

பின்னர் நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலும் நீதிமன்ற கட்டிடம் கட்டுவதற்கு தேவையான நிலங்கள் நீதித்துறைக்கு ஒப்படைப்பு செய்வது தொடர்பாக நிலுவை இனங்களை தலைமை நீதிபதி ஆய்வு செய்தார். கூட்டத்தில் நிரந்தர மக்கள் மக்கள் நீதிமன்ற தலைவர் ஸ்ரீதரன், போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஸ்ராவத், மாவட்ட வன அலுவலர் சச்சின் போஸ்லே துக்காராம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News