உள்ளூர் செய்திகள்
வணிக வளாக மதுவிருந்தில் என்ஜினீயர் மரணம்- மேலும் 2 பேரிடம் போலீசார் விசாரணை
வணிக வளாக மதுவிருந்தில் என்ஜினீயர் மரணம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அண்ணாநகர்:
கோயம்பேடு அருகே உள்ள தனியார் வணிக வளாகத்தில் கடந்த 21-ந்தேதி இரவு அனுமதியின்றி மதுவிருந்து நடைபெற்றது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். அப்போது மடிப்பாக்கத்தை சேர்ந்த என்ஜினீயர் பிரவீன் அதிக மது போதையில் மயங்கி விழுந்து இறந்தார்.
இது குறித்து திருமங்கலம் போலீசார் ஏற்கனவே வழக்குப்பதிவு செய்து மது விருந்துக்கு ஏற்பாடு செய்து இருந்த விக்னேஷ் சின்னதுரை, மார்க், பாரத் உள்பட 6 பேரை கைது செய்தனர். இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக மேலும் 2 பேரிடம் போலீசார் மீண்டும் விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க ப்படும் என்று தெரிகிறது.