உள்ளூர் செய்திகள்
விளாத்திகுளத்தில் 22 காவலர்களுக்கு பதக்கங்கள்-டி.எஸ்.பி. வழங்கினார்
2019-ம் ஆண்டில் காஞ்சிபுரம் மாவட்டம் அத்திவரதர் கோவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட விளாத்திகுளத்தில் 22 காவலர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டது.
எட்டயபுரம்:
விளாத்திகுளம் உட்கோட்டத்தில் டி.எஸ்.பி. பிரகாஷ் தலைமையில் நடைபெற்ற வாராந்திர கவாத்து பயிற்சியில், கடந்த 2019-ம் ஆண்டில் காஞ்சிபுரம் மாவட்டம் அத்திவரதர் கோவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவலர்களுக்கு சிறப்பு பதக்கங்கள் வழங்கி கவுரவித்தார்.
இந்த வாராந்திர கவாத்து பயிற்சியில் விளாத்திகுளம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஆனந்தத்தாண்டவம், எட்டயபுரம் இன்ஸ்பெக்டர் ஜின்னா பீர்முகமது, விளா த்திகுளம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி, காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் என 160 பேர் கலந்துகொண்டனர்.
மேலும் இதில் டி.எஸ்.பி பிரகாஷ் காவலர்களுக்கு பொதுமக்களிடம் கனிவாக நடந்துகொள்ள வேண்டும், சட்ட ஒழுங்கை பாதுகாக்க வேண்டும் உள்ளிட்ட துறைசார்ந்த அறிவு ரைகளை வழங்கினார்.
விளாத்திகுளம் உட்கோட்டத்தில் டி.எஸ்.பி. பிரகாஷ் தலைமையில் நடைபெற்ற வாராந்திர கவாத்து பயிற்சியில், கடந்த 2019-ம் ஆண்டில் காஞ்சிபுரம் மாவட்டம் அத்திவரதர் கோவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவலர்களுக்கு சிறப்பு பதக்கங்கள் வழங்கி கவுரவித்தார்.
இந்த வாராந்திர கவாத்து பயிற்சியில் விளாத்திகுளம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஆனந்தத்தாண்டவம், எட்டயபுரம் இன்ஸ்பெக்டர் ஜின்னா பீர்முகமது, விளா த்திகுளம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி, காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் என 160 பேர் கலந்துகொண்டனர்.
மேலும் இதில் டி.எஸ்.பி பிரகாஷ் காவலர்களுக்கு பொதுமக்களிடம் கனிவாக நடந்துகொள்ள வேண்டும், சட்ட ஒழுங்கை பாதுகாக்க வேண்டும் உள்ளிட்ட துறைசார்ந்த அறிவு ரைகளை வழங்கினார்.