உள்ளூர் செய்திகள்
ஆட்டோ டிரைவர் சங்கிலி முருகன்

பிளஸ்-2 மாணவியை கடத்திய ஆட்டோ டிரைவர்

Published On 2022-05-29 07:47 GMT   |   Update On 2022-05-29 07:47 GMT
சாணார்பட்டி அருகே பிளஸ்-2 மாணவியை கடத்திய ஆட்டோ டிரைவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
குள்ளனம்பட்டி:

சாணார்பட்டி அருகே அஞ்சுகுழிபட்டியைச் சேர்ந்தவர் சங்கிலிமுருகன் (28).ஆட்டோ டிரைவர். இவர் கடந்த 20-ந் தேதி பிளஸ் 2 மாணவியை திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி கடத்திச் சென்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். எங்கும் கிடைக்காததால் சாணார்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.

அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பள்ளி மாணவியை கடத்திச் சென்ற ஆட்டோ டிரைவரை தேடி வந்தனர்.

இந்த நிலையில் சாணார்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜான்சன் ஜெயக்குமார் தலைமையிலான போலீசார் ஆட்டோ டிரைவர் சங்கிலி முருகனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து திண்டுக்கல் சிறையில் அடைத்தனர்.
Tags:    

Similar News