உள்ளூர் செய்திகள்
போட்டியை கென்னடி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்த போது எடுத்த படம்.

டென்னிஸ் போட்டி- கென்னடி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

Published On 2022-05-29 05:09 GMT   |   Update On 2022-05-29 05:09 GMT
உப்பளத்தில் டென்னிஸ் போட்டியை கென்னடி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி:

உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட இந்திரா காந்தி விளையாட்டு அரங்கில் உள்ள டென்னிஸ் மைதானத்தில் ஓபன் நான் ரேங்கிங் போட்டி தொடக்க விழா நடைபெற்றது.

உப்பளம் தொகுதி எம்.எல்.ஏ. அனிபால் கென்னடி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இதில் சுமார் 200-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர்.

விழாவில் புதுவை டென்னிஸ் சங்க தலைவர் பிரதாபன், போத்தீஸ் பொது மேலாளர் அருள்மொழி,குழு உறுப்பினர்கள் சிவகுமார், புகழேந்தி, அமுத கணேசன், கணேஷ், விஜய் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கடந்த 26-ந் தேதி தொடங்கிய இப் போட்டி  முடிவடைகிறது. போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளது.
Tags:    

Similar News