உள்ளூர் செய்திகள்
கள்ளிக்குடி அருகே கட்டித்தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
திருமங்கலம்
திருமங்கலம் அருகே கள்ளிக்குடி, கல்லணையை சேர்ந்தவர் பழனியாண்டி(வயது35). இவர் கட்டித்தொழி லாளியாக பணிபுரிந்து வந்தார்.
இந்தநிலையில் கடந்த சில தினங்களாக கணவன், மனைவிக்குள் குடும்பபிரச்னை ஏற்பட்டு உள்ளது. இதனால் மனவிரக்தியில் இருந்த பழனியாண்டி நேற்று மருதங்குடி கிராமத்திற்கு சென்று பெற்றோரை சந்தித்துபேசியுள்ளார்.
பின்னர் மருதங்குடி ஊரணிக்கு சென்ற அவர் அங்கு விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அவரை மீட்டு மதுரை அரசுமருத்துவமனைக்கு 108 ஆம்புலன்சில் கொண்டு சென்றனர். செல்லும் வழியில் பழனியாண்டி உயிரிழந்தார்.