உள்ளூர் செய்திகள்
ஆர்ப்பாட்டம் நடந்தது.

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தக்கோரி ஆர்ப்பாட்டம்

Published On 2022-05-27 09:50 GMT   |   Update On 2022-05-27 09:50 GMT
வலங்கைமானில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நீடாமங்கலம்:

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் கடைத்தெ ருவில் மத்திய அரசு உடனடியாக விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தை கட்சி ஆகிய கட்சிகள் ஒன்றிணைந்து போராட்டம் நடத்தினர்.

இதில்  இந்திய கம்யூனிஸ்ட்மாவட்ட நிர்வாக குழு ரங்கராஜன், ஒன்றிய செயலாளர் செந்தில்குமார், சிபிஐஎம் ஒன்றியசெயலாளர் ராதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News