உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

பாம்பு கடித்து விவசாயி பலி

Published On 2022-05-27 09:30 GMT   |   Update On 2022-05-27 09:30 GMT
சத்தியமங்கலம் அருகே தோட்டத்திற்கு வாழை இலை அறுக்க சென்ற விவசாயி பாம்பு கடித்து பலியானார்.
ஈரோடு:

சத்தியமங்கலம் அருகே தோட்டத்திற்கு வாழை இலை அறுக்க சென்ற விவசாயி பாம்பு கடித்து பலியானார்.

சத்தியமங்கலம் அடுத்த செண்பகபுதூர், மேட சின்னனூர் பகுதியை சேர்ந்தவர் ஈஸ்வரமூர்த்தி (47).

இவரது மனைவி பூங்கொடி. கணவன் மனைவி இருவரும் விவசாயம் செய்து வருகின்றனர். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

சம்பவத்தன்று வாழை தோட்டத்திற்கு ஈஸ்வரமூர்த்தி அதே ஊரை சேர்ந்த 2 பேருடன் சென்று வாழை இலையை அறுத்து கொண்டிருந்தனர். அப்போது ஈஸ்வர–மூர்த்தியை பாம்பு கடித்து விட்டது.  

இதனால் ஈஸ்வர–மூர்த்தி மயங்கி விழுந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த உடன் இருந்தவர்கள் ஈஸ்வரமூர்த்தியை மீட்டு சிகிச்சைக்காக சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். 

பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி ஈஸ்வரமூர்த்தி பரிதாபமாக இறந்தார். 

இதுகுறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News