உள்ளூர் செய்திகள்
பொள்ளாச்சி அருகே விபத்து-விவசாயி பரிதாப சாவு
இது குறித்து கோமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை:
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள செங்குட்டுபாளையம் கடை வீதியை சேர்ந்தவர் பத்ரன் (வயது 65). விவசாயி. இவரது மனைவி திம்மக்காள் (60). சம்பவத்தன்று இவர்கள் 2 பேரும் மொபட்டில் திப்பம்பட்டி பெட்ரோல் பங்க் அருேக சென்று கொண்டு இருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த கார் மொபட் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட கணவன்-மனைவி இருவரும் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர். இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் 2 பேரையும் மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு 2 பேரையும் டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர்.
ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் பத்ரன் பரிதாபமாக இறந்தார். திம்மக்காள் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து கோமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.