உள்ளூர் செய்திகள்
கோவையில் மூதாட்டி விஷம் குடித்து தற்கொலை
சம்பவத்தன்று வீட்டில் இருந்த ஆரியம்மாள் வாழ்க்கையில் விரக்தி அடைந்து சாணிப்பவுடரை குடித்தார். சிறிது நேரத்தில் மயங்கினார்.
கோவை:
கோவை சூலூர் அருகே உள்ள பூராண்டம் பாளையத்தை சேர்ந்தவர் பழனி. இவரது மனைவி ஆரியம்மாள் (வயது 82). இவர் வயது முதிர்வு காரணமாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இதன் காரணமாக ஆரியம்மாள் கடந்த சில நாட்களாக மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார்.
சம்பவத்தன்று வீட்டில் இருந்த அவர் வாழ்க்கையில் விரக்தி அடைந்து சாணிப்பவுடரை குடித்தார். சிறிது நேரத்தில் மயங்கினார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் ஆரியம்மாள் பரிதாபமாக இறந்தார். இது குறித்து சுல்தான்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.