உள்ளூர் செய்திகள்
கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் தற்கொலை
கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
திருமங்கலம்
மதுரை மாவட்டம் திரும ங்கலம் அருகே கிழவனேரி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமராஜ். இவருடைய மகன் ராஜதுரை(வயது21). இவர் மதுரை கப்பலூரில் உள்ள காமராஜர் உறுப்புக் கல்லூரியில் பி.ஏ. ஆங்கிலம் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
நேற்று கல்லூரிக்கு சென்று விட்டு வீடு திரும்பியுள்ளார் அப்போது அவர் வைத்திருந்த செல்போன் தொலைந்துவிட்டது. செல்போன் தொலைந்ததால் பெற்றோர்கள் திட்டுவார்கள் என்ற பயத்தில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ராஜதுரை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இச்சம்பவம் குறித்து திருமங்கலம் தாலுகா போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே ராயபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துராஜ்(48).
எம்.பி.ஏ. பட்டதாரி, இவருக்கு 2 திருமணம் முடித்து குழந்தைகள் இல்லை.
2 மனைவிகளிடமும் விவகாரத்து ஆகிவிட்டது. இதனால் முத்துராஜ் தனிமையில் இருந்து வந்துள்ளார்.
இதில் விரக்தியடைந்த முத்துராஜ் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவலறிந்த திருமங்கலம் தாலுகா போலீசார் முத்துராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். முத்துராஜ் அண்ணன் கணேசன் கொடுத்த புகாரின் பேரில் திருமங்கலம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.