உள்ளூர் செய்திகள்
1000 குடும்பங்களுக்கு தென்னங்கன்று வழங்கல்
வேதாரண்யத்தில் 1000 குடும்பங்களுக்கு தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டது.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யம் ஒன்றியத்தில் 5 இடங்களில் உழவர் வேளாண்மைத் துறை சார்பாக கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு நலத்திட்டம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
வேதாரண்யம் தாலுகா தகட்டூர் ஊராட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தி.மு.க ஒன்றிய செயலாளார் உதயம் முருகையன் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் ரேவதி பாலகுரு, வேளாண்மை உதவி இயக்குனர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதேபோல தேத்தாகுடி–தெற்கு , பஞ்சநதிக்குளம் கிழக்கு, வாய்மேடு பிராந்தி–யங்கரை ஊராட்சிகளில் நிகழ்ச்சியில் நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் தி.மு.க அவைத்தலைவர் சீனிவாசன், ஊராட்சி மன்ற தலைவர் வனிதா ரவிச்சந்திரன் முன்னாள் கவுன்சிலர் கோவிந்தசாமி, வேளாண் அலுவலர்கள் வைரவமூர்த்தி, இந்திரா, ஊராட்சி மன் உறுப்பினர்கள் , ஞானசுந்தரி , ஒன்றியக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் 1000 குடும்பங்களுக்கு தலா 3 தென்னங்கன்றுகள் வீதம் 3000 தென்னங்கன்றுகளும் 50 சதவீத மானியத்தில் தார்பாய், பிரேயர் உள்ளிட்டவைகளும், 75 சதவீத மானியத்தில் உளுந்தும், 90 சதவீத மானியத்தில் பண்ணை கருவிகள் மண்வெட்டி, கடப் பாறை உள்ளிட்ட பொருட்களும் இந்த நிகழ்ச்சியில் பயனாளி–களுக்கு வழங்கப்பட்டது.