உள்ளூர் செய்திகள்
.

சேலம் வழியாக செல்லும் கோவா ரெயிலில் கூடுதல் ஏ.சி.பெட்டிகள்

Published On 2022-05-24 10:00 GMT   |   Update On 2022-05-24 10:00 GMT
சேலம் வழியாக செல்லும் கோவா ரெயிலில் கூடுதலாக ஏ.சி.பெட்டிகள் இணைக்கப்படுகிறது.
சேலம்:

கோவா மாநிலம் வாஸ்கோடகாமாவில் இருந்து சேலம், ஈரோடு, கரூர் வழியாக வேளாங்கண்ணிக்கு ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயிலில் கூடுதலாக 2 மூன்றடுக்கு ஏ.சி. பெட்டிகள் இணைத்து இயக்கப்படும்  என ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

அதன்படி நேற்று கூடுதல் ஏ.சி. பெட்டிகளுடன் ரெயில் இயக்கப்பட்டது.  வருகிற ஜூன் மாதம் 27ந் தேதி வரை  தற்காலிகமாக இயக்கப்படும். இதேபோல் மறு மார்க்கத்தில் செல்லும் வேளாங்கண்ணி- வாஸ்கோடகாமா வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயிலில் (வண்டி எண் 17316) கூடுதலாக 2 மூன்றடுக்கு ஏசி பெட்டிகள் இணைக்கப்பட்டு  நாளை முதல் வருகிற ஜூன் மாதம் 28ந் தேதி தற்காலிகமாக இயக்கப்படும் என்று சேலம் ரெயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News