உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

கூடங்குளத்தில் புகையிலை விற்ற 2 பேர் கைது

Published On 2022-05-24 09:55 GMT   |   Update On 2022-05-24 09:55 GMT
கூடங்குளத்தில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை:

கூடங்குளம் அருகே உள்ள செட்டிகுளத்தை சேர்ந்தவர் மனோகரன் (வயது 32).

இவரும், அதே பகுதியை சேர்ந்த பால்துரை (55) என்பவரும் சட்டவிரோதமாக புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருப்பதாக கூடங்குளம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.  

அதன்பேரில் போலீசார் அவர்களிடம் சோதனை செய்தனர்.

அப்போது புகையிலை பொருட்களை பதுக்கி வைத்தது கண்டுபிடிக்கப்பட்டது.

 இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து சுமார் 100 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News