உள்ளூர் செய்திகள்
விஷம்

கோவையில் கள்ளக்காதலியுடன் விஷம் குடித்த வாலிபர் பலி

Published On 2022-05-23 08:05 GMT   |   Update On 2022-05-23 08:05 GMT
கோவையில் கள்ளக்காதலியுடன் விஷம் குடித்த வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது கள்ளக்காதலிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கோவை:

சிவகங்கையை சேர்ந்தவர் வினோத்குமார் (வயது30). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

இவர் கோவை ரத்தினபுரி நாராயணசாமி லே-அவுட்டில் தங்கி பெயிண்டராக வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு வினோத்குமாருக்கு அதே பகுதியை சேர்ந்த திருமணமான 27 வயது பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது.

இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. வினோத்குமார், அந்த பெண்ணின் கணவர் வேலைக்கு சென்றதும் அவரது வீட்டிற்கு சென்று இளம்பெண்ணுடன் உல்லாசம் அனுபவித்து வந்தார்.

இந்த விவகாரம் அரசல், புரசலாக அந்த பெண்ணின் கணவருக்கு தெரியவந்தது. இதை கேட்டதும் அதிர்ச்சியான அவர், தனது மனைவியை கண்டித்தார். மேலும் அந்த வாலிபருடனான பழக்கத்தை கைவிடுமாறு கூறி அறிவுரைகளை வழங்கினார்.

ஆனால் அதனை அவர்கள் கண்டு கொள்ளவில்லை.

இந்த நிலையில் தங்களை பிரித்து விடுவார்கள் என்று நினைத்த அந்த பெண் சம்பவத்தன்று வினோத்குமாரை வீட்டிற்கு அழைத்தார்.

அப்போது இளம்பெண், நம்மை இவர்கள் சேர்ந்து வாழவிடமாட்டார்கள். நாம் இருவரும் சேர்ந்து தற்கொலை செய்து கொள்ளலாம் என முடிவு செய்தனர்.

அதன்படி 2 பேரும் வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்தனர். சிறிது நேரத்தில் 2 பேரும் மயங்கி விழுந்தனர். இதனை அக்கம்பக்கத்தினர் பார்த்து ரத்தினபுரி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து விஷம் குடித்த கள்ளக்காதல் ஜோடியினரை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி வினோத்குமார் உயிரிழந்தார்.

அவரது கள்ளக்காதலிக்கு தொடர்ந்து டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இதையடுத்து போலீசார் வினோத்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News