உள்ளூர் செய்திகள்
மின்சாரம் தாக்கி பலி

திருவள்ளூர் அருகே மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் பலி

Published On 2022-05-15 06:17 GMT   |   Update On 2022-05-15 06:17 GMT
திருவள்ளூர் அருகே மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவள்ளூர்:

திருவள்ளூரை அடுத்த புல்லரம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் நவீன் (வயது 31). எலக்ட்ரீசியன். இவர் காக்களூர் பகுதியில் உள்ள கட்டிடத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது மின் வயரை இழுத்த போது அருகில் சென்ற உயர் மின் அழுத்த கம்பியில் மின் வயர் உரசியது. இதில் மின்சாரம் தாக்கியதில் நவீன் பலியானார். இதுகுறித்து திருவள்ளூர் தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News