உள்ளூர் செய்திகள்
குதிரை வாகனத்தில் வீதியுலா வந்த ஆனந்த காமாட்சி அம்மன்.

ஆனந்த காமாட்சி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா

Published On 2022-05-11 09:23 GMT   |   Update On 2022-05-11 09:23 GMT
வேதாரண்யம் தாலுகா ஆயக்காரன்புலம் 2ம் சேத்தியில் அமைந்துள்ள ஆனந்த காமாட்சி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.
வேதாரண்யம்:

வேதாரண்யம் தாலுகா ஆயக்காரன்புலம் 2ம் சேத்தி செட்டியார்குத்தகை ஆனந்த காமாட்சி அம்மன் முனிஸ்வார ஆலய சித்திரை பெருவிழாகடந்த 3 ந் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது

நாள்தோறும் சுவாமி சிறப்பு அபிஷேகம் வீதியுலா நடைபெற்றது நேற்று மாலை மஞ்சள் விளையாட்டு நடைபெற்றது பின்பு அம்பாள் குதிரை வாகனத்தில் வீதியுலா நடைபெற்றது இதில் ஏரளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

முன்னதாக அம்மனுக்கு மாவிளக்கு போடுதல் காவடி எடுத்தல் உள்ளிட்ட நேர்தி கடனை செலுத்தினார் இரவு வணவேடிக்கையும் அன்னதானமும் இன்னிசை பட்டிமன்றம் நடைபெற்றது.

விழாவில் பக்தர்களுக்கு இனிப்பு கஞ்சி வழங்கபட்டது விழா ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர்கள் கணேஷ், பொன்னுதுரை, மனோகரன், திருநாவுக்காரத மற்றும் மருளாளிகள் கிராமவாசிகள் செய்து இருந்தனர்.

Tags:    

Similar News