உள்ளூர் செய்திகள்
மரணம்

சங்கராபுரம் அருகே மாமியார் வீட்டுக்கு வந்த மருமகன் மரணம்

Published On 2022-05-08 10:47 GMT   |   Update On 2022-05-08 10:47 GMT
சங்கராபுரம் அருகே மாமியார் வீட்டுக்கு வந்த மருமகன் மரணம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சங்கராபுரம்:

சென்னை, பெருங்குடியைச் சேர்ந்தவர் முனுசாமி (வயது35). இவர் ரங்கப்பனூரைச் சேர்ந்த சங்கீதா என்பவரை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்தார். இவர்களுக்கு 9 வயதில் ஒரு மகள் மற்றும் 5 வயதில் ஒரு மகன் இருக்கின்றனர்.

கடந்த 5ந் தேதி ரங்கப்பனுாரில் உள்ள மாமியார் வீட்டுக்கு வந்த முனுசாமி உடல் நலக் குறைவு ஏற்பட்டது. சேலம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இறந்தார். இது குறித்த புகாரின் பேரில், வடபொன்பரப்பி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News