உள்ளூர் செய்திகள்
கொள்ளை

முடிச்சூரில் கோவில் உண்டியலை தூக்கி சென்ற கொள்ளை கும்பல்

Published On 2022-05-08 15:29 IST   |   Update On 2022-05-08 15:29:00 IST
முடிச்சூரில் கோவில் உண்டியலை தூக்கி சென்ற கொள்ளை கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

தாம்பரம்:

தாம்பரம் அடுத்த முடிச்சூர் பகுதியில் வைகரை அம்மன் கோவில் உள்ளது. இன்று காலை கோவிலை திறக்க நிர்வாகி ஜெமின் என்பவர் வந்தபோது அங்கிருந்த உண்டியலை கொள்ளை கும்பல் அடியோடு பெயர்த்து தூக்கி சென்று இருப்பது தெரியவந்தது. உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய ரூ.30 ஆயிரத்துக்கு மேல் ரொக்கம் மற்றும் தங்கம், வெள்ளி பொருட்கள் இருந்ததாக தெரிகிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News