உள்ளூர் செய்திகள்
கொரோனா தடுப்பூசி

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டத்தில் 7 ஆயிரம் இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்

Published On 2022-05-08 07:38 GMT   |   Update On 2022-05-08 07:38 GMT
பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தி கோரோனா நோயில் இருந்த தற்காத்து கொள்ள வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

செங்கல்பட்டு:

கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் இன்று தமிழகம் முழுவதும் நடைபெற்றது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டத்தல் மொத்தம் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் கொரோனா தடுபூசி முகாம் நடந்தது. தடுப்பூசி செலுத்தாத பொதுமக்கள் காத்திருந்து தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தம் 2118 தடுப்பூசி முகாம் நடைபெற்றது. மாவட்டத்தில் இதுவரை 917874 பேர் முதல் தவணையும், 721742 பேர் 2ம் தவணையும் தடுப்பூசி செலுத்தி உள்ளனர்.

பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தி கோரோனா நோயில் இருந்த தற்காத்து கொள்ள வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் 16,60,499 முதல்தவணையும் 13,21,750 பேர் 2ம் தவனையும் தடுப்பூசி செலுத்தி இருக்கிறார்கள். இன்று மாவட்டத்தில் மொத்தம் 2039 இடங்களில் சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. இதன் மூலம் 92349 பேருக்கு தடுப்பூசி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் 203 சுகாதார பணியாளர்கள் 1082 முன்கள பணியாளர்கள், தனியார் மற்றும் அரசு மருத்துவ கல்லூரி செவிலியர்கள் பயிற்சி பள்ளி மாணவர் 497 பேர் பங்கேற்கின்றனர். இந்த தடுப்பூசி முகாமை முழுமையாக பயன்படுத்தி பயனடைய வேண்டும் என்று செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல் நாத் கேட்டுக் கொண்டுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் 3340 இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. 5600 பணியாளர்கள இதில ஈடுபட்டனர். திருமழிசை ஒத்தாண்டேஸ்வரர் கோயில் அருகே நடைபெற்ற தடுப்பூசி முகாமை தலைமைச்செயலர் இறையன்பு நேரில் பார்வையிட்டார். அப்போது மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், சுகாதாரத்துறை இணை இயக்குனர் ஜவகர்லால், திருமழிசை பேரூராட்சி செயலாளர் ரவி உடன் இருந்தனர்.

Tags:    

Similar News