உள்ளூர் செய்திகள்
சுமங்கலி காளியம்மன் கோவில் தீமிதி திருவிழா
மயிலாடுதுறையில் உள்ள சுமங்கலி காளியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடைபெற்றது.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாப்படுகை ரெயில்வே கேட் அருகில் அமைந்துள்ள சுமங்கலி காளியம்மன், சுமங்கலி மாரியம்மன் கோயில் 39 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா நடைபெற்றது.
இதற்கு முன்னதாக காவிரி கரையில்இருந்து கரகம் காவடி காளிஆட்டம் புற ப்பட்டு அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் வீதி உலா வந்தது. கோயில் முன்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தீக்குண்டத்தில்பக்தர்கள் இறங்கி தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர்.
இதனை தொடர்ந்து மாப்படுகை அய்யனார் கோயில் நகர மற்றும் கிராம சீர் வரிசையுடன் அம்பாள் சன்னதி வந்தடைந்தது. தீப ஆராதனையும் கஞ்சி வார்த்தலும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஆலய அர்ச்சகர் ஸ்ரீதர், செயல் அலுவலர் அசோக்குமார், நகர கிராமவாசிகள் இளைஞர் நற்பணி மன்றத்தினர் பொதுமக்கள் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.