உள்ளூர் செய்திகள்
திருச்சம்பள்ளியில் கிராம சபை கூட்டம் நடந்தது.

சிறப்பு கிராமசபை கூட்டம்

Published On 2022-05-04 12:51 IST   |   Update On 2022-05-04 12:51:00 IST
செம்பனார்கோவில் ஒன்றியம் திருச்சம்பள்ளி ஊராட்சியில் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெற்றது.
தரங்கம்பாடி:

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயில் ஒன்றியம் திருச்சம்பள்ளி ஊராட்சியில் மே தினம் தொழிலாளர்கள் தினத்தை முன்னிட்டு கிராமசபை கூட்டம் நடைபெற்றது. 

இந்த கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் துரை தலைமை தாங்கினார். பற்றாளர் லதா முன்னிலை வகித்தார். துணைத் தலைவர் சசிகுமார் வரவேற்றார்.

கூட்டத்தில் பொதுமக்க ளிடம் குறைகள் கூற அனுமதிக்கப்பட்டது. அப்போது சாலை வசதிகள் செய்து தரவேண்டும். நேரடி நெல் கொள்முதல் நிலையம், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்துத் தரவேண்டும்.வாய்க்கால் குளங்கள் தூர் வார வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் முன் வைத்தனர்அதனை தீர்மானங்களில் எழுதப்ப ட்டடு வட்டார வளர்ச்சி அலுவலருக்கு வழங்கப்படும் என்று கூறினர். 

இதில் சமூக ஆர்வலர் கார்த்திக், பெண்கள், விவசாயிகள் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர் நிகழ்ச்சியின் முடிவில் ஊராட்சி செயலர் மீனா நன்றி கூறினார்.

Similar News