உள்ளூர் செய்திகள்
தமிழ்நாடு பிராமணர் சங்கம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பாரதிசெல்லம்மா சிலை ரதத்திற்கு வரவேற்பு

Published On 2022-05-03 15:01 IST   |   Update On 2022-05-03 15:01:00 IST
சீர்காழியில் பாரதிசெல்லம்மா சிலை ரதத்திற்கு வரவேற்பு அளித்தனர்.
சீர்காழி:

சீர்காழி வருகைபுரிந்த பாரதிசெல்லம்மா திருவுருவசிலை அமைக்கப்பட்ட ரதத்திற்கு சிலம்பாட்டம், மயிலாட்டம் பட்டாசு வெடித்து மாலை அணிவித்தும் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள், வணிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

மகாகவி பாரதியின் மனைவியான செல்லம்மாவின் பிறந்த ஊரான தென்காசி மாவட்டம் கடையம் பகுதியில் சேவாலயா அறக்கட்டளையின் சார்பாக செல்லம்மா பாரதி கற்றல் மையம் அமைக்கப்பட்டு வருகிறது.

 இங்கு நிறுவுவதற்காக உருவாக்கப்பட்ட செல்லம்மா பாரதியின் திருவுருவ சிலை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் ரதத்தில் யாத்திரையாக கொண்டு செல்லப்பட்டு நிறைவாக ஜூன் 27-ம் தேதி செல்லம்மா -பாரதி திருவுருவ சிலை நிறுவப்படவுள்ளது செல்லம்மாபாரதி திருவுருவ சிலையுடன் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகர பகுதிக்கு வந்தடைந்த ரதத்தின வரவேற்கும் விதமாக சீர்காழி சபாநாயக முதலியார் இந்து மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளின் வரவேற்பு விழா நடைபெற்றது. பள்ளி தலைமைஆசிரியர் அறிவுடைநம்பி, உதவி தலைமைஆசிரியர்கள் துளசிரெங்கன், வரதராஜன், உடற்கல்விஇயக்குனர் முரளிதரன் ஆகியோர் முன்னிலையில் மாணவ}மாணவிகள் சிறப்பாக வரவேற்பு அளித்தனர்.தொடர்ந்து பாரதியாரின் கவிதைகள் குறித்தும் பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டிகள் நடைபெற்றது. 

சிலம்பாட்டம், மயிலாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம், கட்டைக்கால் சிலம்பம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் பட்டாசுகள் வெடித்தும் மாலை அணிவித்தும் உற்சாக வரவேற்பு ரதத்திற்கு அளிக்கப்பட்டது. பின்னர் புறப்பட்டு வந்த ரதத்திற்கு சீர்காழி நகரமன்ற தலைவர் துர்காபர மேஸ்வரிராஜசேகரன், துணை தலைவர் சுப்பராயன், கவுன்சிலர்கள் நித்தியாதேவிபாலமுருகன், ஜெயந்திபாபு, பாஸ்கரன், முபாரக் மற்றும் திமுகவை சேர்ந்த ஜே.கே.செந்தில் ஆகியோர் வர வேற்பு அளித்தனர்.

பின்னர் சங்கர மடம் வந்தடைந்த ரதத்திற்கு தமிழ்நாடு பிரமாணர் சங்கம் சார்பில் மாவட்ட தலைவர் கடவாசல்.ரமணன், வெங்கட்ராமன், முத்துகுமார், ராதாகிருஷ்ணன் ஆகியோ ரால் வரவேற்பு அளிக்கப்பட்டது.பின்னர் தென்பாதியில் சாய்ராம் வித்யாலயா, சாரதாவித்யாலயா மெட்ரிக்பள்ளி சார்பில் அதன் தாளாளர் ராஜா, தலைவர் கதிரவன், செயலாளர் சாய். ராக்கேஷ் ஆகியோர் ரதத்தினை வரவேற்றனர்.

சீர்காழி விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சுபம்வித்யாமந்திர் பப்ளிக் பள்ளி ஆகியன சார்பில் செல்லம்மாள் பாரதி ரதத்திற்கு சிறப்பான வரவேற்று அளித்தனர். சீர்காழி புதிய பேருந்து நிலையத்தில் திருக்குறள் பண்பாட்டுப் பேரவை சார்பில் அதன் தலைவர் சக்கரபாணி செயலாளர் அன்பழகன், பேராசிரியர் வீழிநாதன், ராமநாதன் மற்றும் நிர்வாகிகள் திரளாக கலந்துகொண்டு திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து ரதத்திற்கு உற்சாக வரவேற்பு அளித்தனர் அதை தொடர்ந்து சீர்காழி நகர பகுதியில் ஊர்வலமாக சென்ற பாரதி செல்லம்மா திருவுருவச்சிலைக்கு வழிநெடுகிலும் மாலை அணிவித்தும், பட்டாசுகள் வெடித்தும் பொதுமக்கள், வணிகர்கள், அரசியல் பிரமுகர்கள், மரியாதை செலுத்தி வரவேற்பளித்தனர்.

Similar News