உள்ளூர் செய்திகள்
வைத்தீஸ்வரன் கோவிலில் கிருத்திகை வழிபாடு - தருமபுரம் ஆதீனம் பங்கேற்பு
சித்திரை மாத கிருத்திகையை முன்னிட்டு வைத்தீஸ்வரன் கோவிலில் நடந்த சிறப்பு வழிபாட்டில் தருமபுரம் ஆதீனம் பங்கேற்றார்.
சீர்காழி:
மயிலாடுதுறைமாவட்டம் சீர்காழி அடுத்த வைத்தீ ஸ்வரன் கோவிலில் தருமபுரம் ஆதீனத்துக்கு உட்பட்ட தையல்நாயகி அம்பாள் உடனாகிய வைத்தியநாத சுவாமி கோயில் உள்ளது. பிரசித்திப்பெற்ற இக்கோயிலில் செல்வமு த்துக்குமாரசாமி, செ வ்வாய்க்கு அதிபதியான அங்காரகன் தனி சன்னதி களில் அருள்பாலி க்கின்றனர்.
இக்கோயிலில் சித்திரை மாத கிருத்திகை சிறப்பு வழிபாடு நடந்ததுமுன்ன தாக கிருத்திகை மண்ட பம் எழுந்தருளிய செல்வ முத்துக்குமார சுவாமிக்கு இளநீர், தேன், பால், தயிர், பஞ்சாமிர்தம், பன்னீர், சந்தனம் முதலான 51 வகை நறுமண திரவியப் பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம்செய்ய ப்பட்டது.
தொடர்ந்து மலர்களால் அலங்க ரிக்க ப்பட்டு சண்முகா அர்ச்சனை நடைபெற்று மகா தீபம் காட்டப்பட்டது.இதில் தருமபுரம் ஆதீனம் 27ஆவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த ஸ்வாமிகள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்து பக்தர்களுக்கு அருட்பிரசாதம் வழங்கினார்.