உள்ளூர் செய்திகள்
பாணாவரத்தில் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் நடைபெற்றது எடுத்தப்படம்.

பாணாவரத்தில் வருமுன் காப்போம் மருத்துவ முகாம்

Published On 2022-04-30 15:11 IST   |   Update On 2022-04-30 15:11:00 IST
பாணாவரத்தில் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் நடைபெற்றது.
நெமிலி:

ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் கிராமத்தில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் என்ற சிறப்பு மருத்துவ முகாம் நிகழ்ச்சி நடைபெற்றது.இதலி் 15-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து சுமார் 750 நபர்கள் கலந்து கொண்டு சிகிச்சை பெற்று பயனடைந்தனர்.

மேலும் முகாமில் பாணாவரம் லயன்ஸ் கிளப் மூலம் தன்னார்வலர்கள் சிலர் ரத்ததானம் செய்தனர். பின்னர் அங்கன்வாடி பணியாளர்கள் கர்ப்பிணிகள் சாப்பிட வேண்டிய சத்துணவு குறித்து கண்காட்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

அப்போது முகாமில் வட்டார மருத்துவ அலுவலர் டேவிஸ் பிரவீன் ராஜ்குமார், காவேரிப்பாக்கம் சேர்மன் அனிதா குப்புசாமி உள்ளிட்ட செவிலியர்கள் மருத்துவர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் இதில் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

Similar News