உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

போதை பொருட்கள், கஞ்சா விற்ற 2 பேர் கைது

Published On 2022-04-28 10:04 GMT   |   Update On 2022-04-28 10:04 GMT
சத்தியமங்கலம்-பங்களாபுதூர் பகுதிகளில் போதை பொருட்கள், கஞ்சா விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஈரோடு:

சத்தியமங்கலம்-பங்களாபுதூர் பகுதிகளில் போதை பொருட்கள், கஞ்சா விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

பங்களாபுதூர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தனபால் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது இலூர்மேடு பஸ் நிறுத்தம், சக்தி-அத்தாணி சாலையில் வாலிபர் ஒருவர் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்று கொண்டிருந்தார். 

போலீசை கண்டதும் அந்த வாலிபர் தப்பி ஓட முயன்றார்.  அவரை மடக்கிப் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் சத்தியமங்கலம் அடுத்த வரதம் பாளையம் கிராமத்தை சேர்ந்த நாகராஜ் (32) என்பதும் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்ததும் தெரிய வந்தது.

அவரிடம் இருந்து ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள 250 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து பங்களாபுதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நாகராஜை கைது செய்தனர்.

இதேபோல் சத்தியமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் பிரபுதாஸ் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது சத்தியமங்கலம்-பண்ணாரி செல்லும் சாலை பழைய மார்க்கெட் பகுதி அருகே ஒருவர் நின்றுகொண்டிருந்தார்.

அவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை சோதனை செய்தபோது அந்த நபர் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது. 
போலீஸ் விசாரணையில் அவர் சத்தியமங்கலம் மேற்கு சந்து பகுதியை சேர்ந்த குணசேகரன் (69) என தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
Tags:    

Similar News