உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்.

டிராக்டர்-டிப்பர்களுக்கு மணல் வழங்க அனுமதி

Published On 2022-04-28 12:49 IST   |   Update On 2022-04-28 12:49:00 IST
கொள்ளிடம் ஆறு,குவாரியிலிருந்து 30-ந் தேதி முதல் டிராக்டர்-டிப்பர்களுக்கு மணல் வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
சீர்காழி:

சீர்காழி அருகே மாதிலிவேளூர், வடரெங்கம் கிராமத்தில் மணல்குவாரி திறக்கப்பட்டு இயங்கி வருகிறது. முதல்கட்டமாக தற்போது பெரிய டாரஸ்லாரி, லாரிகளில் முன்பதிவு செய்து மணல் அள்ளிசெல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.

 இதனிடையே டிராக்டர் டிப்பர்களிலும் மணல் வழங்கவேண்டும் டிராக்டர்உரிமையாளர்கள் போராட்டம் அறிவித்தனர். இதனையடுத்து சீர்காழி வட்டாட்சியர் செந்தில்குமார் தலைமையில் நடைபெற்ற அமைதிபேச்சுவார்த்தையில் மணல்குவாரியிலிருந்து டிராக்டர் டிப்பர்களுக்கு மணல் வழங்கி வாழ்வா தாரத்தை காக்வேண்டும் என்ற கோரிக்கை பரிசீ லிக்கப்பட்டு நாளை டிராக்டர் டிப்பர்களுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பபட்டு 30-ந் தேதி முதல் மணல் டெப்போவில் மணல் வழங்கப்படும் என பொதுப்பணித்துறையினரால் தெரிவிக்கப்பட்டது.

மயிலாடுதுறை, குத்தாலம், தரங்கம்பாடி வட்ட டிப்பர்களுக்கு  குன்னம் மணல் டெப்போவிலும், சீர்காழி டிப்பர்களுக்கு பாலூரான்படுகை டெப்போ மூலம் மணல் வழங்கப்படும் என தெரிவிக்க ப்பட்ட தையடுத்து அறிவிக்கப்பட்ட போராட்டம் விலக்கி கொள்ளப்பட்டது.

Similar News