உள்ளூர் செய்திகள்
கண்ணமங்கலம் நூலகத்தில் உலக புத்தக தின விழாவின் போது எடுத்த படம்.

கண்ணமங்கலம் நூலகத்தில் உலக புத்தக தின விழா

Published On 2022-04-24 14:35 IST   |   Update On 2022-04-24 14:35:00 IST
கண்ணமங்கலம் நூலகத்தில் உலக புத்தக தின விழா நடைபெற்றது.
கண்ணமங்கலம்:

கண்ணமங்கலம் பகுதியில் உள்ள கிளை நூலகம் நாகமரத்தெருவில தனியார் கட்டிடத்தில் இடமாற்றம் செய்து, நேற்று 23 உலக புத்தக தின விழா நடைபெற்றது.

வாசகர் வட்டத்தலைவர் கார்த்திகேயன் தலைமையில் நடந்த இவ்விழாவில், நூலகர் சிவசங்கரன் வரவேற்று பேசினார்.

இதில் வேலூர் மாவட்ட கருவூல கண்காணிப்பாளர் பூங்கொடி செல்வன், ஓய்வு பெற்ற நீதி மன்ற அலுவலர் பாலாஜி, உள்பட பலர் கலந்து கொண்டனர். மாணவ மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டது.

மேலும் நூலக புரவலராக தலா ரூ.1000 செலுத்திய 10 பேருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

Similar News