உள்ளூர் செய்திகள்
மாமல்லபுரம் நுழைவு வாயிலில் குப்பைகளை எரிப்பதால் சுற்றுலா பயணிகள் அவதி
மாமல்லபுரத்துக்குள் நுழையும் சுற்றுலா பயணிகள் முகம் சுழிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
மாமல்லபுரம்:
மாமல்லபுரம், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள "வளம் மீட்பு பூங்கா" குப்பை கிடங்கு உள்ளது. இங்கு போதிய இடவசதி இல்லாததால் பேரூராட்சி நிர்வாகம், ஓட்டல்கள் குப்பைகளை மாமல்லபுரம் நுழைவு வாயிலில் சாலை ஓரங்களில் கொட்டி எரித்து வருகிறார்கள்.
இதனால் மாமல்லபுரத்துக்குள் நுழையும் சுற்றுலா பயணிகள் முகம் சுழிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து குப்பைகள் கொட்டி எரிப்பதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.