உள்ளூர் செய்திகள்
FILEPHOTO

615 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு: 2 பேர் கைது

Published On 2022-04-23 15:39 IST   |   Update On 2022-04-23 15:39:00 IST
615 லிட்டர் சாராய ஊறல் அழித்து 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
பெரம்பலூர்:


பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணி உத்தரவின்பேரில், மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) ஆரோக்கியபிரகாசம் தலைமையிலான போலீசார் அரசால் தடை செய்யப்பட்ட சாராயம் காய்ச்சுவோர், விற்போர் மீது நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.


இந்த நிலையில் நேற்று குன்னம் தாலுகா, ஒகளூர் வடக்கு தெருவை சேர்ந்த ரவிச்சந்திரன்(வயது 50) என்பவர் சாராயம் தயாரிக்க பேரல்களில் வைத்திருந்த 375 லிட்டர் ஊறலையும், 1லு லிட்டர் சாராயத்தையும் மது விலக்கு அமலாக்க பிரிவு போலீசார் கைப்பற்றி அழித்தனர். இதையடுத்து ரவிச்சந்திரனை கைது செய்த போலீசார், அவரை சிறையில் அடைத்தனர்.

இதேபோல் அதே கிராமத்தில் காமராஜ் நகரை சேர்ந்த பழனிவேல்(67) என்பவர் தனது கொட்டகையில் பேரல்களில் வைத்திருந்த 240 லிட்டர் சாராய ஊறலையும் போலீசார் கைப்பற்றி அழித்தனர். மேலும் பழனிவேலையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

.

Similar News