உள்ளூர் செய்திகள்
FILEPHOTO

வாகன விபத்தில் தலைமை காவலர் காயம்

Published On 2022-04-23 15:12 IST   |   Update On 2022-04-23 15:12:00 IST
வாகன விபத்தில் தலைமை காவலர் காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பெரம்பலூர்:

பெரம்பலூர் அருகே உள்ள எளம்பலூர் கிராமம் இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் ஜாபர் அலி (வயது 40) இவர் குன்னம் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வருகிறார்.

இவர் நேற்று திருச்சி வழி காவல் பணியை முடித்துவிட்டு விடியற்காலை மூன்று மணி அளவில் வீட்டிற்கு செல்வதற்காக பெரம்பலூர் 4ரோடு அருகே நின்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக வந்த பெரம்பலூர் வடக்கு மாதவி கிராமத்தை சேர்ந்த அத்தியப்பன் (வயது 60) என்பவரது டூ வீலரில் லிப்ட் கேட்டு ஏறி வீட்டிற்கு சென்றார்.

திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது.

இதில் தலைமை காவலர் ஜாபர் அலி தலை மற்றும் கை கால்களில் பலத்த அடி ஏற்பட்டது. இது குறித்து தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் உடனடியாக ஜாஃபர் அலியை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அத்தியப்பன் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News