உள்ளூர் செய்திகள்
ஆபாச வீடியோவை காட்டி மிரட்டி பெண்ணுக்கு பாலியல் தொல்லை- வாலிபருக்கு போலீஸ் வலைவீச்சு
பெரம்பலூர் அருகே ஆபாச வீடியோவை காண்பித்து பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் மீது கொலைமிரட்டல், பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகேஉள்ள இனாம் அகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரசாத். இவரது மனைவி வைதேகி (வயது 23) இவர்களுக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 2 மகன்கள் உள்ளனர்.
இந்த நிலையில் வைதேகியின் கணவர் பிரசாத் கடந்த ஒன்றரை வருடமாக பெங்களூரில் வேலை பார்த்து வந்தார். அப்போது வைதேகிக்கும், பெரம்பலூர் வி.களத்தூர் கிராமத்தைச் சேர்ந்த வீரய்யா (23) என்ற இளைஞருக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. மேலும் உல்லாசமாக இருந்தபோது அவருக்கு தெரியாமல் வீரய்யா ஆபாச வீடியோ எடுத்ததாக தெரிகிறது.
இதற்கிடையே கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வைதேகியின் கணவர் பிரசாந்த் சொந்த ஊரான இனம் அகரம் கிராமத்திற்கு வந்தார். இதனால் வைதேகி கள்ளக்காதலனை ஓரம் கட்டினார். ஆனால் வீரய்யாவால் காதலியை மறக்க இயலவில்லை.
இதையடுத்து அவர் வைதேகியுடன் இருந்த ஆபாச வீடியோவை காண்பித்து தனது ஆசைக்கு இணங்குமாறு மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து வைதேகி மங்களமேடு போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் மங்களமேடு போலீஸார் வழக்குப் பதிவு செய்து ஆபாச வீடியோவை காண்பித்து பாலியல் தொல்லை கொடுத்த வீரய்யா மீது கொலைமிரட்டல், பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதனை மோப்பம் பிடித்துக்கொண்ட வீரய்யா தலைமறைவாகிவிட்டார். அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.